சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு வரும் மாணவிகள் பெரும்பாலும் சைக்கிள்களில் சென்று வருகின்றனர். இவர்களுக்கு சைக்கிள் நிறுத்த போதிய அளவு இடம் இல்லை. இதனால் மாணவிகள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சைக்கிள் நிறுத்த இடவசதி ஏற்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.