சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் சில இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. தேங்கிய குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் குப்பைகளை எரியூட்டுகின்றனர். அதன் மூலம் வெளிவரும் காற்றை சுவாசிப்பதன் காரணமாக நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகள் தேங்குவது மற்றும் எரியூட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.