சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. நாய்கள் துரத்தி கடிப்பதால் சிலர் காயமடைகின்றனர். மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.