சட்ட விரோதமாக மது விற்பனை

Update: 2022-09-12 13:45 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன்பு சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து, அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் காலையில் வேலைக்கு செல்ல தயாராக இருக்கும் ஆண்களில் சிலர் மது வாங்கி குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிகின்றனர். இதனால் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்