பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கால கட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிப்பதற்காக வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கூட்டம் நடத்தும் வகையில் கூடாரம் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த கூடாரம் பயன்படுத்தப்படாமல் பூட்டியே காணப்படுகிறது. இதனால் அந்த கூடாரம் தற்போது விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே அந்த கூடாரத்தை கண்காட்சி, சிறப்பு முகாம்கள் நடத்த பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.