மதுரை மாவட்டம் பெரியார் மற்றும் ஆரப்பாைளயம் பஸ் நிலையங்களில் இருந்து பல ஊர்களுக்கு பஸ் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடங்களில் உள்ள முக்கிய நிறுத்தங்களில் பெயர் பலகைகள் இல்லை. இதனால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே முக்கிய நிறுத்தங்களில் பெயர் பலகை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.