சிதறும் மண்களால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-11 13:03 GMT

அரியலூர்-ஜெயங்கொண்டம் செல்லும் முதன்மை சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இதன் வழியாக தினமும் சிமெண்டு ஆலைகளுக்கு டிப்பர் லாரிகள் அதிகளவில் சென்று வருகிறது. இந்நிலையில் இங்கு முதன்மை சாலையில் அமைந்துள்ள செண்டர் மீடியனில் அதாவது கலெக்டர் அலுவலகம் முதல் பஸ் நிலையம் வரை மணல் மற்றும் சுண்ணாம்புக்கல் மண்கள் தேங்கி மேடாக உள்ளது. மேற்படி மண்கள் இவ்வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்து விடுகிறது. சில சமயங்களில் விபத்துகளும் ஏற்பட்டு விடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்