நாகை மாவட்டம் திருமருகல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதன்காரணமாக வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருமருகல்