விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராம பொது மயானத்திற்கு செல்லும் பாதை கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப்பாதை மண்சாலையாக காட்சியளிக்கிறது. இதனால் மழை பெய்தால் சாலையானது சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.