அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ளது குணமங்கலம் கிராமம். இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் பாதையில் இரு புறங்களிலும் அப்பகுதியில் உள்ள ஒரு சிலர் ஆடு, மாடுகளை சாலையின் ஓரத்தில் கட்டிச் செல்வதால் அவ்வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமத்தோடும், பயத்தோடும் பள்ளிக்குச் செல்ல வேண்டி உள்ளது . எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.