புஞ்சைத்துறையம்பாளையம் அருகே பங்களாப்புதூர் அண்ணா நகர் சாலையில் பெண்களுக்கான நவீன கழிப்பிடம் உள்ளது. இது கடந்த 2 ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. கழிப்பிட கட்டிடத்தை சுற்றி செடி, கொடிகள் வளா்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள் கழிப்பிடத்துக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். உடனே கழிப்பிடத்தை பராமரிக்க அதிகாரிகள் ஆவன செய்வார்களா?