சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஒய்யவந்தான், பேச்சாத்தகுடி கிராமத்தில் உள்ள சாலைகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாத நிலையில் நாய்கள் துரத்துகின்றன. மேலும் இரவுநேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாதவாறு சத்தம் எழுப்புகின்றன. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.