பயனற்ற சுகாதார வளாகம்

Update: 2022-09-10 13:32 GMT
அரியலூர் அய்யப்பன் ஏரிக்கரை பகுதியில் பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் பராமரிப்பு இன்றி சுகாதார வளாகம் சிதிலமடைந்து காணப்படுவதினால், பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இவற்றால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்