பெரம்பலூரில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்தக்கூடிய பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு, அக்கல்வி நிறுவனங்கள் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மாணவ-மாணவிகள் ஏற்றி செல்லப்படுகின்றனர். இதனால் விபத்து ஏற்படு்ம் சூழ்நிலை உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டும், காணாத போல சென்று விடுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் தனியார் கல்வி நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை ஏற்றி செல்லவும், அதனை மீறும் கல்வி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.