பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக செட்டிகுளம்-ஆலத்தூர் மெயின் ரோட்டில் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவதோடு மட்டுமின்றி அந்த வழியாக செல்வோர்களை துரத்தி கடிக்க பாய்கிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர்கள் விபத்துக்கு ஆளாகின்றனர். மேலும் சாலையில் குறுக்கே அங்கும், இங்கும் நாய்கள் ஓடுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.