அரியலூர் மாவட்டம், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது பெய்ந்த மழைநீர் மீன்சுருட்டி கடைவீதியில் கடந்த ஒரு வாரமாக தேங்கி நிற்பதால், அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.