பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா உள்பகுதியில் பராமரிப்பு இன்றி காணப்படுவதால் தற்போது செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. மேலும் அதில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு வருகிறது. ரவுண்டானா உள்பகுதியில் செயற்கை நீருற்று அமைத்து, அழகு செடிகள் வளர்த்து பராமரித்து வர சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.