பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2022-09-09 14:58 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் விழாக்களில் பட்டாசு வெடிக்க போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெரும்பாலான விழாக்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறது. அதிலும் அதிக சத்தத்தை எழுப்பும் நாட்டு மருந்து வெடிகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுகிறது. இதனை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரும் கண்டுகொள்வதில்லை. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க விழாக்களில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்