கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் அருகே கட்டிப்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தையொட்டி விவசாய நிலங்கள் உள்ளன. அதேபோல் முன்பகுதியில் தார்சாலை செல்கிறது. இந்நிலையில் இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித் தரப்படவில்லை. இதன் காரணமாக பள்ளிக்கூடத்தை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் இருந்து பாம்புகள், விஷப்பூச்சிகள் ஊர்ந்து பள்ளிக்குள் வருகிறது. இதனால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் உள்ளனர். எனவே பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.