தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்

Update: 2022-09-09 12:46 GMT
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டிக்கு தெற்கே பெரிய திருக்கோணம் செல்லும் முதன்மை சாலையில் அமைந்துள்ளது சேலத்தான்காடு, மங்கட்டான் கிராமங்கள். இந்த கிராமத்தில் சாலையின் ஓரப்பகுதியில் ஏரி ஒன்று உள்ளது. மு.புத்தூர் கிராமத்தில் இயங்கும் சுண்ணாம்புக்கல் சுரங்கத்திலிருந்து 24 மணி நேரமும் அசுர வேகத்தில் சுண்ணாம்புக்கல் எடுத்துச் செல்லும் லாரிகள் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்துக்கள் ஏற்படுத்தும் விதமாக சென்று வருகிறது. சில சமயங்களில் கரையில்லாத ஏரியின் அருகே எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு இரு சக்கர வாகன ஓட்டிகள் வழி விட்டு ஒதுங்கி நிற்கும்போது இருசக்கர வாகனங்கள் மற்றும் லாரிகளும் ஏரிக்குள் சென்று விபத்துகள் நிகழ்ந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு மேற்படி ஏரியின் ஓரப்பகுதியில் தெற்கு பகுதியில் மட்டுமே பெயரளவிற்கு தடுப்பு சுவர் பாதியளவு மட்டுமே அமைத்துள்ளனர். வடக்கு பகுதியில் (ஆபத்தான வளைவு) எவ்வித தடுப்பு சுவரும் அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்