பெரம்பலூர் ரோவர் வளைவு பகுதிகளிலும், எளம்பலூர் சாலையில் உள்ள கீரின் சிட்டி பகுதியிலும் நாளுக்கு நாள் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் சாலையில் செல்வோர்களை துரத்தி கடிக்க பாய்கிறது. மேலும் சிறுவர்களை துரத்தி, அவர்கள் கையில் வைத்திருக்கும் திண்பண்டங்களை பிடுங்கி விடுகிறது. இதனால் அந்தப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடனையே காணப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.