பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நான்கு ரோடு செல்லும் சாலை ஓரத்தில் மழைநீர் வடிகால் வசதி புதிதாக கட்டப்பட்டுள்ளது. ஆனால் வேலை நடைபெற்று போது தோண்டப்பட்ட மண் தற்போது சாலையின் மையப்பகுதியில் பரவி கிடக்கிறது. இதனால் அந்த மண்ணால் சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுவததோடு படுகாயங்களுடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் பரவி கிடக்கும் மண்ணை அகற்ற நடவடிக்ைக எடுக்க வேண்டுகிறோம்.