சேலம் மாவட்டம் 18-வது வார்டு மெய்யனூரில் உள்ள பனங்காட்டு தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் தெருவில் நடந்து செல்பவர்களையும், வண்டியில் செல்பவர்களையும் துரத்தி துரத்தி கடிக்கிறது. இதனால் அந்த தெருவில் இருக்கும் பொது மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த நாய்களை பிடித்து செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வம், மெய்யனூர், சேலம்.