நாய்கள் தொல்லை

Update: 2022-09-07 13:50 GMT
திருச்சி பெரிய மிளபாறையில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும் மக்கள் மற்றும் இரவு நேரங்ககளில் பணி முடிந்து மோட்டார் சைக்கிள்களில் செல்வோரையும் பின்னால் துரத்தி சென்று கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி