தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் வெள்ளிச்சந்தை செல்லும் சாலையில் உள்ள சிறுவர் பூங்கா அருகில் உள்ள குடிநீர் தொட்டி புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அங்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பிரமணி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.