மதுரை மாவட்டம் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, ஜெய்ஹிந்த்புரத்தில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்தநிலையில் மழை பெய்தால் இந்த பள்ளத்தில் மழைநீரானது தேங்கி வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.