நாய் தொல்லை

Update: 2022-09-06 13:00 GMT
எட்டயபுரம் மெயின் பஜார் மற்றும் தெருக்களில் நாய்கள் அதிகமாக சுற்றித் திரிகின்றன. இதனால் அப்பகுதியில் விளையாடும் சிறுவர்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்லும்போது நாய்கள் திடீரென குறுக்கே பாய்வதால் அவ்வப்போது விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே, நாய் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்