சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-05 13:58 GMT
திருச்சி மாவட்டம். அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பழங்காவேரி பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இங்கு கழிவுநீர் தொட்டிக்கு செல்லும் குழாய்கள் உடைந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் சுகாதார வளாகத்தில் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. மேலும் வளாகம் முன்பு செடி, கொடிகள் அதிகளில் முளைத்துள்ளது. இதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்