பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அய்யர்பாளையம் காட்டு கொட்டாயில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள விவசாயிகளின் வயல்கள் செம்மண்குட்டையில் உள்ளது. அங்கு செல்ல வேண்டும் என்றால் வக்கனாபுரி ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். தற்போது ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் விளை பொருட்களையும், பால் உற்பத்தியாளர்கள் கறந்த பாலையும் ஆற்றை சிரமத்துடன் கடந்து அய்யர்பாளையத்துக்கு கொண்டு வருகின்றனர். இல்லையென்றால் அ.மேட்டூர், விஜயபுரம் சென்று அய்யர்பாளையத்துக்கு சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் சிரமத்துடன் ஆற்றை கடந்து அய்யர்பாளையத்துக்கு வந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே கலெக்டர் அய்யர்பாளையம் வக்கனாபுரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி தர தமிழக அரசை வலியுறுத்த வேண்டுகிறோம்.