சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பாப்பா ஊரணி 34 மற்றும் 35-வது வார்டுகளில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரத்தில் வீட்டின் பின்புறம் வழியாக பன்றிகள் உள்ளே புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் பன்றிகளால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. தொல்லை தரும் பன்றிகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?