தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-09-04 11:58 GMT

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி பகுதி முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆங்காங்கே சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் ஜெயங்கொண்டம் செல்லும் பஸ் நிறுத்த பகுதியில் அதிகளவில் குப்பைகள் தேங்கி, சேறும் சகதியுமாக காணப்படுவதினால் நோய் பரவும் அபாயம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றிவிட்டு, குண்டும், குழியுமாக சாலைகளில் சிமெண்டு கலவைகளை கொண்டு சரிசெய்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்