திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வடக்கு மாங்குடியில் உள்ள மின் கம்பத்தில் செடி கொடி வளர்ந்து உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. அருகில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்த மின் கம்பத்தில் உள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,மாங்குடி