திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சி.அய்யம்பாளையம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதினால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி, தெரு நாய்கள் மீது வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை கடிக்க வருவதினால் அவர்கள் பெரிதும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.