தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி கோவிலூர் கிராமத்தில் பயன்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகத்தை சுற்றிலும் முட்புதர்கள் அதிகளவு வளர்ந்துள்ளது. இதனால் விஷப் பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் முட்புதர்களை அகற்ற வேண்டும். மேலும் பழுதான இரும்பு கதவுகளை சீரமைக்க வேண்டும்.
-பசுபதி, தர்மபுரி.