போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் வேண்டும்

Update: 2022-09-02 14:26 GMT
கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகாவில் வட்டார வளர்ச்சி அலுவலகம், ,போக்குவரத்து பணிமனை, வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு பள்ளிகள் உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் மண்மங்கலத்திற்கு ஏராளமான வாகனங்கள் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து செல்கிறது. இதனால் எப்போதும் மண்மங்கலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. எனவே மண்மங்கலத்தில் மேம்பாலம் அமைத்து கொடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்