திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் ட்ரங்க்ரோடு செக்போஸ்ட் அருகில் ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மையத்தில் வண்ண விளக்குகளின் ஒளிவெளிச்சத்துடன் கூடிய செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டு திருச்சி நகருக்குள் நுழையும் அனைவரையும் கவரும் வகையில் எழிலாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு வந்த நிலையில், தற்சமயம் பொலிவிழந்தும் செயலற்றும் உள்ளது. எனவே நகரின் நுழைவு வாயிலாக உள்ள அவ்விடத்தில் மீண்டும் புதுப்பொழிவுடன் செயல்படுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.