கோத்தகிரி டானிங்டன் விநாயகர் கோவில் முதல் எம்.ஜி.ஆர். சதுக்கம் வரை செல்லும் நீரோடை முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் அங்கு மழைக்காலத்தில் நீரோட்டம் தடைபட்டு வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து விடும் அபாயம் காணப்படுகிறது. எனவே புதர் செடிகளை உடனடியாக வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.