கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், பாலவிடுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் திருமணம், காதணி விழா உள்ளிட்ட விழாக்கள் நடத்துவதற்கு பொதுவான இடம் இல்லை. இதனால் ஊராட்சி சார்பாக ஒரு சமுதாய கூடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.