தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-07-10 17:59 GMT

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள காட்டூர் ரெயில் நிலையம் மூடப்பட்டிருந்தது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட எந்த ரெயிலும் இந்த ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது. இது சம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தற்போது காலையில் திருச்சி நோக்கி செல்லும் ரெயிலும், மாலையில் அரியலூர் நோக்கி செல்லும் ரெயிலும் நின்று செல்கின்றன. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்