விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா பொபிலிப்பட்டி கிராமத்தில் வாறுகால் வசதியின்றி கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. இதனால் சாலையில் வாகனங்கள் பயணிக்க, பொதுமக்கள் நடக்க பாதையின்றி சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கிய கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் செல்ல வாறுகால் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?