புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-08-30 17:11 GMT

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி 25-வது வார்டு பூங்கா அருகே சேர்ந்தமரம் சாலையில் உள்ள மசூதைக்கா மேல்நிலைப்பள்ளியின் பிரதான நுழைவு வாயில் முன்பு கழிவுநீர் ஓடை அமைந்துள்ளது. இதில் அடைப்பு ஏற்பட்டதால் அதனை சரிசெய்வதற்காக ஓடை திறக்கப்பட்டது. ஆனால் பணிகள் நடைபெறாமல் திறந்தநிலையில் இருந்ததால் கழிவுநீர் ஓடையில் மாணவர்கள் தவறி விழும் அபாயம் இருப்பதாக கடையநல்லூரை சேர்ந்த வாசகர் சகிலா பானு என்பவர், "தினத்தந்தி" புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக கழிவுநீர் ஓடையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த "தினத்தந்தி"க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்