தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பூதநத்தம் ஊராட்சியில் குண்டல்மடுவு கிராமத்தில் இருளர் காலனி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை செய்து தரப்படவில்லை. கிணற்று நீரையே நம்பி வருகின்ற இவர்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இந்த இருளர் காலனி மக்கள் குடிநீரின்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை முன்வர வேண்டும்.
-ராஜன், குண்டல்மடுவு, தர்மபுரி.