ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகளில் சிலர் மோட்டார்சைக்கிள்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் பிற வாகன ஓட்டிகள் மற்றும் சாலையை கடக்க நிற்கும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைகின்றனர். எனவே போக்குவரத்துத்துறை போலீசார் மேற்கண்ட சாலையில் அதிவேகத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.