சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே சாலையில் பயணிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?