பயணிகள் அவதி

Update: 2025-11-16 11:58 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அரசு பணி மனையிலிருந்து நெடுந்தூரப் பயணமாக சென்னைக்கு இரவு 8.15- க்கும் 9 மணிக்கும் முன்பதிவு வசதியுடன் 2 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உப்பிலியபுரம் மற்றும் சுற்றியுள்ள 68 கிராமங்களில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் இப்பஸ்களையே நம்பி உள்ளனர். 8.15-க்கு இயக்கப்படும் சென்னை பஸ் சரியான நேரத்திலும், 9 மணிக்கு இயக்கப்பட வேண்டிய பஸ் 8.30-க்கும் இயக்கப்படுவதால், குடும்பத்துடன் செல்லும் பயணிகள் பெரும் துயரத்துக்கு உள்ளாகின்றனர். இதுபற்றி கிளை மேலாளிடம் புகார் அளித்தும், டிரைவர்கள் தன்னிச்சையாக செயல்படுவது அதிர்ச்சியை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ்களை சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்