விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எழுவணி ஊராட்சி சேந்தநதி கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சாலை, பஸ், மருத்துவமனை, பள்ளி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. பள்ளி மாணவர்கள் தங்கள் படிப்புக்காகவும், முதியோர்கள் மருத்துவ வசதிக்காகவும் நீண்ட தூரம் சென்றுவர வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்களின் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. எனவே கிராமத்தில் மேற்கூறிய அனைத்து வசதிகளையும் செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?