தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவடி பிறை தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து கீழே விழும் நிலையில் இருப்பதாக வாசகர் திருப்பதி என்பவர், 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக மின்கம்பம் மாற்றப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.