மதுரை மாவட்டம் செல்லூர்- குலமங்கலம் மெயின் ரோடு பகுதியில் மருத்துவமனை, பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பணி நிறைவடைய கால தாமதம் ஆவதால் தோண்டப்பட்ட பள்ளத்தின் வழியாக பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள், பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. எனவே குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.