தூர்வாரப்படாத கல்லாறு

Update: 2022-08-29 12:41 GMT
அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி ஊராட்சி ஆனந்தவாடியில் செல்லும் கல்லாற்றில் கருவேல மரங்கள் மற்றும் செடி, கொடிகள் அதிக அளவில் முளைத்துள்ளதாலும், தூர்ந்துபோன நிலையில் காணப்படுவதாலும் கனமழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழி இன்றி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது. இதனால் விளைபயிர்கள் நாசமாவதால் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கல்லாற்றை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்