சேலம் மாவட்டம் மூங்கில்பாடி பஞ்சாயத்து சேனைக்கவுண்டனூர் கிராமத்தில் குடிநீர் தேவைக்காக பழமையான கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் பூட்டியே வைத்துள்ளனர். தற்போது கிணற்றை தூர்வார நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கிணற்றை தூர்வாராமல் அப்படியே விட்டு விட்டார்கள். இதனால் அந்த பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து கிணற்றை தூர்வாரி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கதிர், சேனைக்கவுண்டனூர், சேலம்.